என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எல்கே அத்வானி"
- எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
- பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.
இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.
இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.
- 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
- எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.
இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#WATCH | President Droupadi Murmu confers Bharat Ratna upon veteran BJP leader LK Advani at the latter's residence in Delhi.
— ANI (@ANI) March 31, 2024
Prime Minister Narendra Modi, Vice President Jagdeep Dhankhar, former Vice President M. Venkaiah Naidu are also present on this occasion. pic.twitter.com/eYSPoTNSPL
- இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
- வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.
பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விருது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து ஜெய்சங்ர் கருத்து.
- அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.
பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அத்வானிக்கு தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து ஜெய்சங்ர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும்.
பல ஆண்டுகளாக, பாரதத்தின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய தருணங்களை அவர் பல வழிகளில் வடிவமைத்துள்ளார். அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
- விருது பெற்ற அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்றிருப்பது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அத்வானியின் மகள் பிரதீபா அத்வானி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எல்.கே.அத்வானியும் உடனிருந்தார். தனக்கு விருது வழங்கியதை ஏற்கும் வகையில் அத்வானி நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை கூப்பி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையடுத்து, பிரதீபா அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டின் மிக உயர்ந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதில் முழு குடும்பமும் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் முழு வாழ்க்கையையும் நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
#WATCH | Pratibha Advani, veteran BJP leader LK Advani's daughter, reacts on Bharat Ratna for her father.
— ANI (@ANI) February 3, 2024
She says, "The entire family and I are very happy that he has been given the highest civilian award in the country...He is very happy...He said that he dedicated his entire… pic.twitter.com/UMe1WNSldc
- பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி.
- துணை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி. தனது 14 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றி அதன் மூலம் அத்வானி அரசியலுக்கு வந்தார்.
ஜன சங்கம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் அந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவராக மிக இளம் வயதில் தேர்வானார். அதன் தொடர்ச்சியாக காங்கிரசுக்கு எதிரான தலைவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.
இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது இவரும் கைதானார். அதன் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய மந்திரி ஆனார்.
1980-ம் ஆண்டு பா.ஜனதாவை வாஜ்பாயுடன் இணைந்து உருவாக்கினார். குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி வரை அவர் நடத்திய ராமர் ரத யாத்திரைதான் தேசிய அரசியலில் பா.ஜனதாவை மிக வலுவாக காலூன்ற வைத்தது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றி உள்ள இவர் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை துணை பிரதமர் ஆகவும் பணியாற்றி உள்ளார். ஒரு தடவை அவர் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமை பதவிக்கு மோடியும், அமித் ஷாவும் வந்த பிறகு அத்வானியின் அரசியல் செயல்பாடுகள் குறைந்தன. தீவிர அரசியலில் இருந்து அவர் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டார். டெல்லியில் உள்ள வீட்டில் தற்போது அவர் ஓய்வு பெற்று வருகிறார்.
தற்போது 97 வயதாகும் அத்வானி கடந்த மாதம் அயோத்தி ராமர் ஆலயத்தில் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வயது முதுமை காரணமாக அதில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் அத்வானியின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்று இருப்பது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்வானியின் சேவையை புகழ்ந்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மகிழ்ச்சியையும், இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.
இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அத்வானி அவர்கள் செய்துள்ள நிகரற்ற பங்களிப்பு மகத்தானது. நாம் வாழும் காலத்தில் வாழும் மிகவும் போற்றலுக்குரிய அற்புதமான மனிதர் அவர்.
அவர் தனது வாழ்க்கையை நாட்டு சேவைக்காகவே தொடங்கினார். அடிமட்ட தொண்டர் முதல் துணை பிரதமர் வரை அவர் நாட்டுக்காக பல்வேறு வகைகளில் சேவை செய்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் சிறப்பானவை.
பாராளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட விவாதங்கள் இன்றும் முன் உதாரணமாக திகழ்கின்றன. பா.ஜ.க.வின் தலைவராக நீண்ட ஆண்டுகள் சேவை யாற்றிய சிறப்பு அவருக்கு உண்டு. அவருடன் பழகுவ தற்கும், இணைந்து சேவை யாற்றியதற்கும் கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்.
தேசிய ஒற்றுமைக்கும், கலாசார மறுமலர்ச்சிக்கும் அத்வானியின் சேவை குறிப்பிடத்தக்கது. அவரது கடின உழைப்பு என்றென் றும் நினைவு கூரத்தக்கது. உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றிய காலங்கள் மறைக்க முடியாதவை.
அவரது சேவைக்கு மீண்டும் எனது வணக்கத்தை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எக்ஸ் வலை தளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாரத ரத்னா விருது பெற்றுள்ள அத்வானி ஏற்கனவே பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது நாட்டின் உயரிய விருதை அத்வானி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பிறந்து இந்திய அரசியலில் உச்சம் பெற்ற அத்வானி தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை வரலாற்றையும் அத்வானி புத்தகமாக எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கும்பாபிஷேகம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு.
- கும்பாபிஷேகத்திற்கான விருந்தினர் பட்டியல் பெரிதாகி வருகிறது.
அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, இந்த நிகழ்வு இன்னும் பல ஆண்டுகளாக நினைவில் வைக்கப்படும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
எனவே, அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் உள்ள புனிதர்கள், பாதிரியார்கள் மற்றும் மதத் தலைவர்களை அழைப்பது மட்டுமல்லாமல், 1992 ஆம் ஆண்டில் அயோத்தி பகுதியில் நிர்வகித்த முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. முக்கிய தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள் மற்றும் பத்ம விருதுகளுடன் கௌரவிக்கப்பட்ட நபர்கள் என்று விருந்தினர் பட்டியல் பெரிதாக இருக்கிறது.
தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய பட்டியல் கவனமாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது என்று அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறினார். விருந்தினர் பட்டியலில் ஆன்மீக தலைவர் தலாய் லாமா, பாபா ராம்தேவ், அம்மா அமிர்தானந்தமயி, முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் கவுதம் அதானி, டாடா குழுமத்தின் நடராஜன் சந்திரசேகரன், எஸ்.என். எல் அண்ட் டி குழுமத்தின் சுப்ரமணியன் மற்றும் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்சித் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்களை கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அயோத்திக்கு வர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
"இருவரும் வயதில் பெரியவர்கள், வயதைக் கருத்தில் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்" என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார்.
பா.ஜ.க. நிறுவன உறுப்பினரான அத்வானிக்கு இப்போது 96 வயது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயது. ஆனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவுக்கு அழைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வயது 90. விழாவுக்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என்று கூறிவிட்டு,அதே வயதையுடைய தேவ கவுடா அழைக்கப்பட்டு இருக்கிறார்.
ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார். ராமர் ரத யாத்திரை என்பது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஊக்குவிக்க எல்.கே. அத்வானி, பா.ஜ.க. நடத்திய அரசியல் மற்றும் மத ஊர்வலம்.
1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடைகளை எதிர்கொண்டு, ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வாதிட்டவர் அத்வானி. அவரை ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு வயதை காரணம் காட்டி வர வேண்டாம் என்று சொன்னது விமர்சனத்திற்கு உள்ளானது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரவேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அறக்கட்டளை சார்பிலான குழு இன்று எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது.
- அத்வானி தனது இடைவிடாத முயற்சியால் நாடு முழுவதும் கட்சி அமைப்பை பலப்படுத்தினார் என மத்திய உள்துறை மத்திரி அமித்ஷா கூறினார்.
- தேசம் மற்றும் அமைப்புக்காக அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு இன்று 95-வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்கு பிரதமர் மோடி நேரில் சென்றார். அவருடன் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உடன் சென்றார்.
பிரதமர் மோடியை அத்வானியின் மகள் பிரதிபா வரவேற்றார். அத்வானியை சந்தித்து மோடி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்கள் சிரித்து பேசியபடி உரையாற்றினார்கள்.
அத்வானிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா டுவிட்டரில் கூறும் போது, 'தேசம் மற்றும் அமைப்புக்காக அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது' என்று கூறினார்.
மத்திய உள்துறை மத்திரி அமித்ஷா கூறும் போது, 'அத்வானி தனது இடைவிடாத முயற்சியால் நாடு முழுவதும் கட்சி அமைப்பை பலப்படுத்தினார். மேலும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த போது நாட்டின் வளர்ச்சிக்கு விலை மதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார்' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்